JN's Blog
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். நான் எழுதுவதை மேம்படுத்த உதவும்.
Sunday, 24 February 2013
இடப்பக்கம்
உன்னையும்
உன் பெயரையும்
என் இடப்பக்கம்
சேர்க்க விரும்புகிறேன் .......
- மீ. ஜீவானந்தம்
Saturday, 13 October 2012
மின்சாரம் இருக்கிறது
பூக்களை மொய்க்கும்
வண்டுகளைப் போல
மக்களும் மொய்கிறார்கள்
தியேட்டருக்கு காசு உள்ளவர்களும்
கோவிலுக்கு காசு இல்லாதவர்களும்
மின்சாரம் அங்கே
இருக்கிறது என்று..........
- மீ. ஜீவானந்தம்
Saturday, 4 August 2012
நீ அருகில் இருந்தால்
நீ அருகில் இருந்தால்
அனைத்துமே
அழகாவும் ரசிக்கவும்
வைக்கின்றன
- மீ.ஜீவானந்தம்
Friday, 15 June 2012
நான் சொல்வது எல்லாம்
நான் சொல்வது எல்லாம்
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
நான் கவிங்கன் என அனைவரும்
ஏற்றுக்கொண்ட பின் ....
-மீ.ஜீவானந்தம்
நான் சொல்வது எல்லாம்
கவிதை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது
சொல்வது உன்னைப் பற்றி என்றால்...
-மீ.ஜீவானந்தம்
Saturday, 9 June 2012
தோற்றுத்தான் போகிறது
கோடை வெயிலும்
தோற்றுத்தான் போகிறது
உந்தன் கோபத்தின் முன்னால்.....
- மீ.ஜீவானந்தம்
Saturday, 7 April 2012
உன் குரல்
உன் குரலை கேட்பதற்காகவே....
தினமும் உன்னை அழைக்கிறேன்...
தயவு செய்து பேசு....
Sunday, 1 April 2012
இதாங்க எங்க ஊரு....
குறுகலான சாலைகள்....
ஆங்காங்கே நிழல் தரும் மரங்கள்....
பங்குனி உச்சவத்திருவிழாகள், விளக்கு பூஜைகள், அன்னதானங்கள்....
தெருவெங்கும் திருவிழா பந்தல்கள், ரேடியோ செட்கள்....
வெய்யிற் காலமானாலும் மேகக் கூட்டங்களோடு கூடிய வானம்...
வெய்யிற் காலங்களில் வீட்டின் முன் தண்ணீர் பந்தல்கள்...
உறவோடு பழகும் மக்கள்....
இதாங்க எங்க ஊரு....
மதுரை.....
-மீ. ஜீவானந்தம்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)