Wednesday, 1 February 2012

இதயத்திலிருந்து சில வரிகள் - 2....


என் காதுகளும், என் இதழ்களும் காத்திருகின்றன
உன் அழைப்புக்காக.....
என் விரல்கள் காத்திருகின்றன உன் குறுஞ்செய்திக்காக....

-மீ.ஜீவானந்தம் 


என் மொபைல் சிணுங்கும் போதெல்லாம் 
மூளை ஆர்வமாகிறது....
மனம் துடிக்கிறது...
இதயம் வேண்டுகிறது...
அழைப்போ!! குறுஞ்செய்தியோ!!
அது உன்னுடையதாக இருக்க வேண்டுமென்று....


-மீ.ஜீவானந்தம் 


அவளோடு பேசிய நாட்கள்....
அவளோடு பழகிய நேரங்கள்....
அவளோடு நடந்த நொடிகள்....
அவளுடைய சிரிப்பு....
என்னை ஈர்த்த அவளுடைய பார்வை....
இவற்றை எப்படி மறக்க முடியும்....

-மீ.ஜீவானந்தம்

No comments:

Post a Comment